Ads (728x90)

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசேட மகப்பேறு வைத்தியர் மற்றும் சிரேஷ்ட பெண் வைத்தியர் ஆகியோரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி வைத்தியர்களின் வேலைநிறுத்தம் இடம்பெற்ற தினத்தில், பாதிக்கப்பட்ட சிசுவின் நிலை மோசமடைந்து வருவதாக வார்டு வைத்தியர் 6 முறை தொலைபேசி மூலம் அழைத்தும், சம்பந்தப்பட்ட விசேட வைத்தியர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலையில் அவசர நிலை நிலவிய அதே நேரத்தில், குறித்த விசேட வைத்தியர் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சை ஒன்றில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட விசேட வைத்தியர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) திருகோணமலை மாவட்டத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget