எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது. அதில் தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள்.
இதன்பின் சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். சட்டசபை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் த.வெ.க. அரசை ஆதரிப்பதாக 144 பேர் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது.
இதனால் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்வதற்கு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Post a Comment