ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கென ஐந்து முக்கிய அம்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றைச் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமாக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2026ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புகள் தற்போது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக 6ஆம் தரத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைவாக, 6ஆம் தரத்துக்கான முதலாம் தவணைக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு பூர்த்தியாகியுள்ளன. இவை இரண்டாம் தவணை பாடப்புத்தகங்களுடன் இணைந்து, உரிய நேரத்தில் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.


Post a Comment