Ads (728x90)

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் 32 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 51 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 314 வழக்குகள், நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில், இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 3,349 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget