Ads (728x90)

ஜனாதிபதி செயலகமும், கிளீன் ஸ்ரீலங்கா செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ரீதியிலான 3 நாட்கள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றைய தினம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை சுகாதாரத் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் முதற்கட்டமாக இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது டெங்கு அவதானம் கூடிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வீட்டுத்தொகுதிகள் மற்றும் கைவிடப்பட்ட இடங்கள் ஆகியன பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

”கிளீன் ஸ்ரீலங்கா” செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget