Ads (728x90)

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் அதிக வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். தாகம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து தண்ணீர் மற்றும் மோர், இளநீர் போன்ற திரவ ஆகாரங்களை அதிக அளவில் குடியுங்கள். தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியில் செல்லும்போது குடை, தொப்பி மற்றும் சன்கிளாஸ்  ஆகியவற்றை உபயோகியுங்கள் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget