நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று முற்பகல் 11.30 முதல் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
.jpeg)
Post a Comment