Ads (728x90)

தித்வா சூறாவளியால் ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னார் துறைக்கும் இடையிலான ரயில் சேவை, பாதை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு தலைமன்னார் நோக்கி ரயில் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தித்வா சூறாவளிக்குப் பின்னர் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டதால், மன்னார் மாவட்ட மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். 

இந்நிலையில், ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மன்னார் மக்களின் நீண்ட தூரப் பயணத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget