இதேவேளை, இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக, மாலபே, தலாஹேனவிலுள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும், வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை மையப்படுத்தியும் காவல்துறை விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மாலபே, தலாஹேனவிலுள்ள தமது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தனது மெய்ப்பாதுகாவலரின் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. அவரது மார்பின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரும். மாலபே காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சி.டி. விக்ரமரத்னவின் மனைவியிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
.jpeg)
Post a Comment