சந்தேகநபர் பஹ்ரைனில் இருந்து மாலைதீவுக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு எதிராக இலங்கையினால் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தலுக்கு அமைய, அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இது குறித்து இலங்கைக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து, இலங்கையிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டு, மாலைதீவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment