நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை 2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை அதிபர்கள் தமது வலயத்தில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பாடசாலைப் பரீட்சார்த்திகள், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேவையான திருத்தங்களை இணையவழியில் செய்துகொள்ளலாம்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தளத்தில் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களைச் மேற்கொள்ளலாம்.
ஓகஸ்ட் 3 ஆம் திகதிக்குக் பின்னர் மேலும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பரீட்சார்த்திகள், பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கமான 1911, தொலைபேசி இலக்கங்களான 0112784208 அல்லது 0112784537, தொலைநகல் 0112784422 அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொள்ளலாம்.
.jpeg)
Post a Comment