Ads (728x90)

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

சுரேஷ் சலேயின் மனுவில் தம்மையும் இணைத்துக்கொண்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்குமாறும், அந்த மனுவை நிராகரிக்குமாறும் பேராயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு எந்தவிதத் தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த குறுக்கீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வில், எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget