Ads (728x90)

மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று பிற்பகல் கட்டார் பயணமானார் 

இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமீரின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ இரங்கலைத் தெரிவிக்கவுள்ளார். 

இந்த விஜயமானது இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget