கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்று சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில்,
கைது செய்யப்பட்ட 04 தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment