உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.

Post a Comment