பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
நபர்கள் தொடர்ந்து போதைப்பொருளை நாடிச் செல்வது அதிலிருந்து கிடைக்கும் ஏதேனுமொரு மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அல்ல, மாறாக போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும் என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
தொடர்ச்சியாக போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் உடலுக்குள் ஏற்படும் இந்தத் திரும்பப் பெறல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் தேவை காரணமாகவே மாணவர்கள் உட்பட எந்தவொரு நபரும் தொடர்ந்து போதைப்பொருட்களைப் பயன்படுத்த தூண்டப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதற்கு கடத்தல்காரர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
மேலும், பாடசாலை அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்பினுள்ளும் பிள்ளைகள் போதைப்பொருளுக்குப் பழக்கப்படும் மற்றும் அடிமையாகும் அதிக போக்கு காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
.jpeg)
Post a Comment