Ads (728x90)

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழுவின் கலந்துரையாடலின் போது, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 பாடங்களுக்குள் வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களும் அடங்கும். மேலும், தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான விழிப்புணர்வுத் திட்டங்கள் விரைவில் நாடுமுழுவதும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget