Ads (728x90)

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகள் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அஸூர் எயார் விமான நிறுவனத்திற்கு மேலதிகமாக, எரோப்ளோட் (Aeroflot) மற்றும் எஸ் செவன் (S7) ஆகிய விமான நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும், இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.

இதனிடையே, 11 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமான நிறுவனம் இலங்கைக்கும், பிரித்தானியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget