இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான விபரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அந்த ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
.jpeg)
Post a Comment