குறிப்பாக திரைத்துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களும் டெக்னீஷியன்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுடைய குரல்களுக்கு தனி மதிப்பு உள்ளது என்றும் சேரன் வலியுறுத்தியுள்ளார். ரஜினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களுக்கு சேரன் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “தமிழ்த் திரைப்படங்களுக்கான 30% கேளிக்கை வரி மற்றும் ஜிஎஸ்டியை குறைக்க தயவு செய்து குரல் கொடுங்கள். உங்கள் குரல் மாற்றத்தை ஏற்படுத்தும். இது எனது வேண்டுகோள்” என தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “ரஜினி சார்… ஜிஎஸ்டி, 30% கேளிக்கை வரியைக் குறைக்க தயவுசெய்து குரல் கொடுங்கள். நமது துறையைக் காக்க வேண்டிய நேரமிது. உங்கள் குரலுக்கென தனி மதிப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment