விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.
விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்பு தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான ஆதாரம் அளிக்கவில்லை எனக்கூறியுள்ள ஐரோப்பிய யூனியன் கோர்ட், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. தற்போது, தடை விலகியதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வங்கிப் பணம் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment