Ads (728x90)

சிவாஜி கேர்ள் ஸ்ரேயா சில வருட இடைவெளிக்குப்பிறகு சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். வெற்றியை தரும் என்று எதிர்பார்த்தவருக்கு அப்படத்தின் தோல்வியால் ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாதபோதும் தெலுங்கு, ஹிந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பாலகிருஷ்ணா நடித்து வரும் பைசா வசூல் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இது பற்றி ஸ்ரேயா கூறுகையில், 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட பாலகிருஷ்ணா எனது லக்கி ஹீரோ. காரணம், அவருடன் இதற்கு முன்பு சென்னே கேசவ ரெட்டி, கெளதமி புத்ரசட்டகர்னி ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அந்த இரண்டு படங்களுமே எனக்கு தெலுங்கில் ஹிட்டாக அமைந்தன. அந்த செண்டிமென்ட் காரணமாக இப்போது பைசா வசூல் படத்திலும் என்னை நடிக்க வைத்துள்ளனர்.
கதைப்படி இந்த படத்தில் நான் ஒரு பத்திரிகை நிருபர் வேடத்தில் நடிக்கிறேன். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேடத்திற்கும் ஒரு பின்னணி கதை படத்தில் உள்ளது என்கிறார் ஸ்ரேயா.

Post a Comment

Recent News

Recent Posts Widget