கைப்பற்றுகின்ற போதைப் பொருள்களை என்ன செய்கின்றீர்கள்?’’ இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றுத் திடீரெனக் கேட்டார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடமே அவர் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. போதைப் பொருள் பாவனை அதிகரிப்புத் தொடர்பான விடயம் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ‘‘பல இடங்களில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதாக அறிகின்றேன். அதனை நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?’’ என்றார் பாதுகாப்பு அமைச்சரை நோக்கி.
திடீரென எழுப்பப்பட்ட அந்தக் கேள்வியால் திக்குமுக்காடிப் போனார் அமைச்சர். அவரது பதிலில் திருப்தியடையாத அரச தலைவர், இது தொடர்பான ஒழுங்குமுறையை தனக்குத் உடன் அறியத்தருமாறு அறிவுறுத்தினார்.
போதைப் பொருள் கட்டுப்படுத்தல் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்த அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச, சாகல ரத்னாயக்கா ஆகியோரை உள்ளடக்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

Post a Comment