Ads (728x90)

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் விசா­ரணை செய்­யும் வகை­யில் அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க மாகாண சபைத் தெரி­வுக்­கு­ழுவை அமைக்­கக் கோரும் பிரே­ரணை நாளைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­பட மாட்­டாது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.
இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மை­யு­டன் கலந்­தா­லோ­சித்த பின்­னரே பிரே­ர­ணையை எப்­போது விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வது என்­பது தொடர்­பில் முடிவு எடுக்­கப்­ப­டும் என்று அறிய முடி­கின்­றது.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­க­ளி­லும் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் நிர்­வாக முறை­கே­டு­கள், மோச­டி­கள் தொடர்­பில் தெரி­வுக் குழு அமைத்து விசா­ரணை செய்­யக் கோரும் பிரே­ரணை, ஆளும் கட்சி உறுப்­பி­னர் அ.பரஞ்­சோ­தி­யி­னால் மாகா­ண­ச­பை­யில் சமர்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.
இந்­தப் பிரே­ர­ணையை சபை அமர்­வில் எடுத்­துக்­கொள்ள வேண்­டாம் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அவைத் தலை­வ­ரி­டம் கோரி­யி­ருந்­தார். மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களே அது தொடர்­பில் முடி­வெ­டுப்­பர் என்று அவைத் தலை­வர் பதி­ல­ளித்­தி­ருந்­தார். இல்லை அவைத் தலை­வரே அந்த முடிவை எடுக்­க­லாம் முத­ல­மைச்­ச­ரும் பதி­ல­ளித்­தி­ருந்­தார்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இடை­யே­யான சந்­திப்­பின் பின்­னர் இந்­தப் பிரே­ர­ணை­யைக் கையாள்­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்டு கடந்த சபை அமர்­வில் விவா­தத்­துக்கு எடுக்­கப்­ப­ட­வில்லை.
இருப்­பி­னும் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள், முத­ல­மைச்­சர் இடை­யே­யான சந்­திப்­பில் தமிழ் அர­சுக் கட்சி அதி­ருப்­தி­ய­டைந்­ததை அடுத்து தெரி­வுக்­கு­ழு­வைக் கோரும் பிரே­ரணை விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டும் என்று ஊகங்­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.
ஆனால் மாகா­ண­ச­பை­யின் நாளைய அமர்­வுக்­கான நிகழ்சி நிர­லில் பிரே­ரணை சேர்க்­கப்­ப­ட­வில்லை. ஏற்­க­னவே சமர்­பிக்­கப்­பட்ட பிரே­ரணை, கைவி­டப்­பட்­ட­தா­கி­யுள்­ள­தால் மீள­வும் அந்­தப் பிரே­ரணை சமர்­பிக்­கப்­பட்­ட­வேண்­டும் என்று வடக்கு மாகாண பேர­வைச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

Post a Comment

Recent News

Recent Posts Widget