நாட்டில் வாழும் ஏனைய மக்களும் இந்த நாட்டுக்கு உரித்துடைய மக்கள். இந்த நாடு அவர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று நினைத்து ஆட்சி நடத்தினால் நிலமை வேறுவிதமாக அமையும்.
இந்தப் பணியை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் நானும் இணைந்து நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் வினைச்சொற்களை விவரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் எழுதப்பட்ட புத்தகம் மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
தமிழ் வினைச்சொற்களை விவரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் எழுதப்பட்ட புத்தகம் மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வினைச்சொற்கள் விவரித்தல் என்ற பெயரில் தேரரினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் தமிழ். சிங்கள மக்களுக்கான உறவுப்பாலமாக அமையும். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இந்தப் புத்தகம் ஓர் உறவை ஏற்படுத்தும்.
வினைச்சொற்கள் விவரித்தல் என்ற பெயரில் தேரரினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் தமிழ். சிங்கள மக்களுக்கான உறவுப்பாலமாக அமையும். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இந்தப் புத்தகம் ஓர் உறவை ஏற்படுத்தும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் பிக்குமார்கள் பாடசாலைகளுக்கு சென்று சிங்களம் கற்பித்தார்கள். தமிழ் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றார்கள். ஆனால் அரசின் மொழிக்கொள்கை அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மாற்றமடைந்த காரணத்தினால் துன்பியல் நிகழ்வாக சிங்கள மொழி கற்பிக்கும் செயற்பாடுகள் தடைப்பட்டு போயின.
அந்த திடமான முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தால் தமிழர்கள் சிங்களத்தையும் சிங்களவர்கள் தமிழையும் கற்றிருப்பார்கள். அந்த நிலை தொடர்ந்திருந்தால் இந்த நாட்டில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் இடம்பெற்றிருக்காமல் போயிருக்கும். அது நடைபெறவில்லை.
வடக்கு கிழக்கில் பல அழிந்த பௌத்த விகாரைகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் தமிழ் பௌத்தர்கள் இருந்தார்கள். எனவே பௌத்தம் இருவருக்கும் பொதுவானது.
அப்படியிருந்தால் எம்மத்தியில் ஏற்பட்டுள்ள குரோதங்களை இலகுவாக நாம் நீக்கிகொள்ள முடியும். நாம் அனைவரும் ஒரே நாட்டு மக்கள். இந்த நாட்டின் எதிர்காலம் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. சிங்கப்பூர் போன்ற நாடுகள் எமது நாட்டை முன்னுதாரனமாக கொண்டுதான் வளர்ச்சிபெற்றன.
இன்று சிங்கப்பூர் எங்குள்ளது நாம் எங்கே உள்ளோம். சிங்கப்பூர் மக்கள் நாளாந்தம் எமது நாட்டினை விடவும் 50 வீதம் அதிகமாக உழைக்கின்றார்கள். இவ்விதமான பின்னணிகளுக்கு எமது கொள்கைகளே காரணமாகும். கொள்கைகளில் மாற்றம் செய்யவேண்டும்.
இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களும் இந்த நாட்டிற்கு உரித்துடைய மக்கள். இந்த நாடு அவர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று ஆட்சிநடத்தினால் நிலமை வேறுவிதமாக அமையும்.
இந்தப் பணியை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் நானும் இணைந்து நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்று நாட்டிற்கான ஒரு பொதுப்பாதையை கொடுக்க வேண்டும்.
நாட்டு மக்கள் மதிப்புடன் சமத்துவடனும் சம உரிமைகளுடனும் வாழ வேண்டியது அவசியமாகும். இந்த நாடு பிரிபடக்கூடாது. இந்த நாடு ஒருமித்த ஒற்றுமையான ஒரே நாடாக எப்பொழுதும் இருக்க வேண்டும். இந்த நாட்டிற்கு எவ்விதமான குந்தகமும் ஏற்படவும்கூடாது.
இதனைப் பிரிப்பதற்கு நாங்கள் எல்லோருமே எதிர்ப்புதான். அதனால் பிரிவினை வாதம் ஏற்படுவதை நாங்கள் எதிர்கின்றோம். நாம் ஒற்றுமையாக ஒருமித்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் – -என்றார்.
நிகழ்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது,
எமது பாடசாலைக் காலத்தில் சிங்கள – தமிழ் மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்கும் சூழல் இருந்தது. குறுகிய அரசியல் நோக்கத்தை கொண்டவர்கள், இந்த ஒற்றுமையை – அன்னியோன்யத்தை கெடுத்துவிட்டார்கள்.
எமது பாடசாலைக் காலத்தில் சிங்கள – தமிழ் மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்கும் சூழல் இருந்தது. குறுகிய அரசியல் நோக்கத்தை கொண்டவர்கள், இந்த ஒற்றுமையை – அன்னியோன்யத்தை கெடுத்துவிட்டார்கள்.
போர் என்னால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால்தான், சம்பந்தன் இன்று என்னுடன் ஒரே மேடையில் இருக்கின்றார்த போர் முடிவுக்கு வந்ததும் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டது.
போர் நடந்தபோது அதனை ஏற்படுத்த முடியாது. இன்று நல்லிணக்கம் என்ற பெயரில் நாட்டைப் பிரிக்க ஏற்பாடு நடக்கின்றது. நாட்டை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று பிரிப்பதற்கு நான் விரும்பவில்லை. நாங்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். எம்மிடையே கோபம், பிரிவினைவாதம், வைராக்கியம் என்பவற்றை ஏற்படுத்த முனைந்தால் அது அரசியல் நோக்கத்திற்காகவே அன்றி மக்களின் தேவைக்காக அல்ல.
நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் செய்யவில்லை. கொடூர பயங்கரவாதத்திற்கு எதிராக 30 வருடம் போர் புரிந்தோம். மூன்று வருடங்களிற்குள் போரை நிறைவுக்கு கொண்டுவந்தோம்.
இன்று அதன் பிரதிபலனாக சுதந்திரமான சுற்றித்திரியும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனக்கு அவ்வாறு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகளுக்கு நான் சென்றால் வெவ்வேறு விடயங்களுக்காக என்னை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். நான் அரச தலைவராக இருந்தகாலத்தில் பொதுநலவாய மாநாட்டுக்குச் சென்றபோது ஆஸ்திரேலியாவில் தங்களது உறவுகளை இழந்தவர்கள் இணைந்து எனக்கெதிராக முறைப்பாடு செய்து கைது செய்வதற்கு முயற்சித்தனர்.
நான் பிரிட்டன் சென்றபோது எனது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முயற்சிக்கப்பட்டது. நான் அமெரிக்காவுக்கு சென்றபோது எனக்கெதிராக நீதிமன்றம் சென்றார்கள். இதுகுறித்து நாங்கள் அப்போது பெரிதாக பேசவில்லை – என்றார்.

Post a Comment