Ads (728x90)

யாழ்ப்­பா­ணம், கொக்­கு­வி­லில் பொலி­ஸார் மீது தாக்­கு­தல் நடத்­தி­ய­வர்­களை தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் என்ற அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறு­வ­தற்கு நான் விரும்­பு­வ­தில்லை. கடும் போக்­கு­வாத குழு அல்­லது இளை­ஞர் குழு தங்­க­ளது சமூ­கத் தேவைக்­காக சில பிழை­க­ளைச் செய்­வ­தற்கு உந்­தப்­ப­ட­லாம். அதன் அர்த்­தம் விடு­த­லைப் புலி­கள் எனப்­ப­டாது” இவ்­வாறு இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க தெரி­வித்­தார்.
பௌத்த மதத் தலை­வர்­க­ளான மல்­வத்­துப் பீடம் மற்­றும் அஸ்­கி­ரிப்­பீட மகா­நா­ய­கர்­களை சந்­திப்­ப­தற்­காக இரா­ணு­வத் தள­பதி நேற்று கண்­டிக்கு பய­ணம் மேற்­கொண்­டார்.
தனது பாரி­யார் மற்­றும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளு­டன் கண்­டிக்­குச் சென்ற அவர், மகா­நா­யக்­கர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யாடி ஆசி பெற்­றுக்­கொண்­டார். அங்­கி­ருந்து திரும்­பிய இரா­ணு­வத் தள­பதி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்து வெளி­யிட்­டார்.
யாழ்ப்­பா­ணம், கொக்­கு­வி­லில் இடம்­பெற்ற பொலி­ஸார் மீதான தாக்­கு­தல் சம்­ப­வத்­தை­ய­டுத்து யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர, விடு­த­லைப் புலி­கள் முழு­மை­யாக அழிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னா­லும், அதன் விதை­கள் உயி­ரு­டனே இருப்­ப­தா­க­வும், இந்த மோதல்­க­ளைப் போன்றே புலி­க­ளின் ஆரம்­ப­கால சூழ்­நிலை இருந்­த­தா­க­வும் கூறி­யி­ருந்­தார்.
இந்த கூற்று தொடர்­பில் செய்­தி­யா­ளர்­கள் இரா­ணு­வத் தள­ப­தி­யி­டம் கேள்வி எழுப்­பி­னர். “தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் என்ற அமைப்பு என்று கூறு­வ­தற்கு நான் விரும்­பு­வ­தில்லை. கடும்­போக்­கு­வா­தக் குழு அல்­லது இளை­ஞர் குழு தங்­க­ளது சமூ­கத் தேவைக்­காக சில பிழை­க­ளைச் செய்­வ­தற்கு உந்­தப்­ப­ட­லாம்.
அதன் அர்த்­தம் விடு­த­லைப் புலி­கள் எனப்­ப­டாது. விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் இல்லை என்று நான் கூற­வ­ர­வில்லை. ஆனால் அதன் அர்த்­தம் முழு­மை­யாக தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அல்ல. எனி­னும் இப்­ப­டிப்­பட்ட அமைப்­புக்­களை எதிர்­கொள்ள முப்­ப­டை­க­ளும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் தயா­ரா­கவே இருக்­கின்­றோம்.
பொலிஸ்மா அதி­பர் கூறு­வ­தில் சில உண்மை இருக்­க­லாம். ஏனென்­றால் பொலி­ஸார் தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தில் தடங்­கல் ஏற்­ப­டு­கி­றது. அந்த சந்­தர்ப்­பத்­தில் இரா­ணு­வம் தலை­யீடு செய்து கட­மையை நிறை­வேற்ற வேண்­டும். அது யாரா­லும் கூறும்­வரை இருக்­கக்­கூ­டாது.
இது­கு­றித்து நான் பொலிஸ்மா அதி­பரை சந்­தித்து பேச்சு நடத்­தி­னேன். மது அருந்­தும் இடத்­தில் வாள் ஒன்றை வைத்­துக்­கொண்டு மது அருந்த முடி­யும் என்­றால் வடக்­குக்­கும் சரி, கிழக்­குக்­கும் சரி அதற்­கெ­தி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும். மது அருந்­து­வ­தற்கு வேறொரு சட்­ட­மும், மது அருந்­தும்­போது வாளை வைத்­தி­ருப்­ப­தற்கு இன்­னு­மொரு சட்­ட­மும் வித்­தி­யா­ச­மா­கும்.
வாள் வைத்­துக்­கொண்டு வேறொரு வேலைக்­குச் சென்­றால் அதற்கு வோறொரு சட்­டம். எனவே சட்­டத்தை இந்த நாட்­டில் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­னால் மக்­கள் ஒழுக்­கத்தை கடை­பி­டித்­தால் இந்த நிலை குறித்து என்­னி­டம் கேள்வி எழுப்­ப­மாட்­டீர்­கள்” என்று ராணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget