தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும் இடையேயான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்ச ரின் இல்லத்தில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதற்கு அமைவாக இன்றைய தினம் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.

Post a Comment