வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், அமைச்சருக்குரிய ஆசனத்தில் – முதலமைச்சருக்கு அருகில் ப.சத்தியலிங்கத்துக்கு ஆசனம் வழங்கப்பட்டிருந்தது. அவர் இப்போதும் அமைச்சுப் பதவியில் தொடர்கின்றாரா? என்ற சந்தேகத்தை இது பலருக்கு ஏற்படுத்தியது.
வடக்கு மாகாண அமைச்சரவைச் சர்ச்சை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையேயான சந்திப்பு இந்த மாதம் 5ஆம் திகதி நடைபெற்றிருந்தது. தமது கட்சியை பழிவாங்கும் நோக்குடன் முதலமைச்சர் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அமைச்சுப் பதவிகளை தமிழ் அரசுக் கட்சி ஏற்பதில்லை என்ற முடிவை அந்தக் கட்சியினர் எடுத்தனர்.
இதற்கு அமைவாக சுகாதார அமைச்சராக இருந்த ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார். முதலமைச்சர் விக்னேஸ்வரன், சத்தியலிங்கத்தினது பதவி விலகலை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், ப.சத்தியலிங்கம் அமைச்சராக இருந்த காலத்தில் அமரும் அதே ஆசனத்திலேயே நேற்றைய தினமும் அமர்ந்தார். அவர் அமைச்சராகப் பதவியைத் தொடர்கின்றாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய சுகாதார அமைச்சரை இன்னமும் நியமிக்காமல் இழுத்தடிப்புச் செய்கின்றார் என்று பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment