தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63 ஆ-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்திலும் பல கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினர். அதன் போது, பிரபாகரனையும் தமிழீழத்தையும் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் 100 மாணவர்களுக்கு பிரபாகரன் புகைப்படத்துடன் கூடிய புத்தகப்பை ஏடுகள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோட்டில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு நாம் தமிழர் கட்சியினர் போர்வை, ரொட்டி என்பவற்றைத் தானமாக வழங்கினர்.
Post a Comment