Ads (728x90)

சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ்­வும், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தலை­மை­யி­லான அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ர­ஸும் இணைந்து பொது அணியை உரு­வாக்க எடுத்த முயற்­சி­கள் பிசு­பி­சுத்­துள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இரு­வ­ரும் பிரிந்தே தேர்­தலை எதிர்­கொள்­ளப் போவ­தா­க அறி­ய­மு­டி­கின்­றது.

இந்­தப் பிரி­வை­ய­டுத்து, சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். அணி­யி­னர், தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யு­டன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ள­னர். இவர்­க­ளு­டன் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னால் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சில­ரும் இணைந்­து­கொள்­ள­வுள்­ள­னர்.

கடந்த மாதம் 12ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் நடை­பெற்ற தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டத்­தின் பின்­னர், செய்­தி­யா­ளர்­களை ஈ.பி.ஆர்.எல்.எவ். தலை­வர் சுரேஷ; பிரே­ம­சந்­தி­ர­னும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­ல­மும் சந்­தித்­த­னர்.

இந்­தச் சந்­திப்­பில் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இரு கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து சிவில் அமைப்­புக்­க­ளை­யும் இணைத்­துப் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறி­வித்­த­னர். இந்­தப் புதிய கூட்­டுக்கு தமிழ் மக்­கள் பேரவை ஆத­ரவு வழங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்­தப் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளான முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மற்­றும் வசந்­த­ராஜா ஆகி­யோர் அதற்கு பகி­ரங்­க­மாக எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­னர்.

இருப்­பி­னும், ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ரஸ் கூட்­டுக்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. பொதுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வ­தற்கு இரு­கட்­சி­க­ளும் இணங்­கி­யி­ருந்­தன.

இதற்­கி­டையே ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் தலை­வர் சுரேஷ; பிரே­ம­சந்­தி­ரன் இந்­தி­யா­வுக்கு அவ­ச­ர­மா­கச் சென்று வந்த பின்­னர், தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­ட­வேண்­டும் என்­பதை எந்­த­வொரு விட்­டுக்­கொ­டுப்­பு­மின்றி வலி­யு­றுத்தி வந்­த­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ரஸ் அதற்கு உடன்­பட மறுத்து விட்­டது. வேண்­டு­மா­னால் தமது கட்­சி­யின் ஈரு­ருளி (சைக்­கிள்) சின்­னத்­தில் போட்­டி­யி­ட­லாம் என்­றும் இல்­லா­வி­டின் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் சின்­னத்­தில் போட்­டி­யி­ட­லாம் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

ஈ.பி.ஆர்.எல்.எவ். சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுரேஷ; பிரே­ம­சந்­தி­ரன் விரும்­ப­வில்லை என்­ப­து­டன், தமிழ் அர­சுக் கட்­சி­யின் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை உட்­ப­டுத்­தப்­பட்ட சில­ரும் அதனை விரும்­ப­வில்லை. இதே­வேளை, காங்­கி­ர­ஸின் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வதை ஈ.பி.ஆர்.எல்.எவ்­வின் முக்­கிய மையக் குழு உறுப்­பி­னர்­கள் விரும்­ப­வில்லை.

இந்த நெருக்­க­டி­யான நிலை­யில், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வும் இந்­தக் கூட்­டுக்கு பொதுச் சின்­னத்தை வழங்க முடி­யாது என்று தெரி­வித்­து­விட்­டது.

சின்­னச் சிக்­க­லால், இரு கட்­சி­க­ளின் கூட்­டும் உடைந்து பிரிந்­துள்­ளது.

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் தமது கட்­சி­யின் கொள்­கை­யைக் கைவி­ட­மு­டி­யாது என்­றும் அத­னால், ஆனந்­த­சங்­க­ரி­யைச் செய­ல­ரா­கக் கொண்ட தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யில் இணைய முடி­யாது என­வும் தெட்­டத் தெளி­வா­கத் தெரி­வித்­து­விட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget