Ads (728x90)

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார் பேட்டையில் டிராவல் எக்ஸ்சேன்ஜ் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு மாதம் 3 ஆயிரத்து 702 ரூபாய் வாடகை செலுத்தி வந்தார்.

இந்த வாடகையை மாநகராட்சி 21 ஆயிரத்து 160 ரூபாயாக உயர்த்தியது. இந்த அளவுக்கு வாடகை கட்ட தனக்கு வசதி இல்லை என்று கூறி லதா நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநகராட்சியின் உயர்த்தப்பட்ட வாடகையை ஏற்பதா வேண்டாமா என்று லதா ரஜினிகாந்த் முடிவு செய்து கொள்ளலாம் ஒரு மாத காலத்துக்குள் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த வேண்டும்.

அப்படி செலுத்தாவிட்டால் அந்த இடத்தை மாநகராட்சி ஏலம் விட வேண்டும். அந்த ஏலத்தில் கலந்து கொண்டு லதா ரஜினி மீண்டும் இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஏலம் அறிவிக்கப்பட்ட பிறகும் லதா ரஜினிகாந்த் கடையை காலி செய்யாவிட்டால் போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அந்த இடத்தை காலி செய்து கொள்ளலாம். இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த தீர்ப்பு அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget