
அதற்கேற்ப புலனாய்வாளர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன என அவர்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர் மடத்தில் விடுதலைப்புலிகள் பெறுமதியான பொருள்கள் மற்றும் வெடிபொருள்கள் என்பவற்றை புதைத்து வைத்துள்ளனர் எனத் தெரிவித்து சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாருடன் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் பரஞ்சோதி தலைமையில் புதையல் தோண்டும் பணி நேற்றுமுன்தினம் மாலை 3 மணியிலிருந்து 6.30 வரை இடம்பெற்றது.
ஆனால் புதையல் எதுவுமே எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவித்ததாவது:
விடுதலைப்புலிகள் நூற்றுக்கணக்கான கிலோ தங்கங்கள் மற்றும் வெடிபொருள்கள், பணம் என்பவற்றை புதைத்து வைத்துள்ளனர் என்று கூறுகின்றார்கள். ஆனால் இதுவரை எவையும் அப்படி மீட்கப்பட வில்லை.
அவ்வாறு இருப்பினும் அவை விடுதலைப்புலி களின் தங்கங்கள் அல்ல.
விடுதலைப்புலிகளின் வங்கிகளில் வைத்த மக்களின் தங்கங்கள்தான் அவை. இவை தொடர்பில் ஏற்கனவே தகவல் அறிந்தவர்கள் சிலர் குறிப்பிட்ட பகுதிகளில் இரகசியமாகத் தோண்டி எடுத்துச் சென்றுவிடுகிறார்கள் என்றே நாம் கருதுகிறோம்.
அண்மையில்கூட வலைஞர்மடம் பகுதியில் பலதடவைகள் அம்புலன்ஸ் வண்டி வந்துசென்றது. எதற்கு வந்தது என்று தெரியவில்லை. கஞ்சா கடத்தல்களும் இடம்பெற்றுள்ளன. அதனால் நாங்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
உண்மையில் ஏற்கனவே இரகசியமாக தோண்டி எடுக்கப்பட்டுவிட, சட்டத்துக்காக மட்டுமே இவ்வாறு நீதிவான் முன்னிலையில் தோண்டப்படுகின்றமை சட்டத்தை ஏமாற்றும் செயல். இது தொடர்பில் உரிய தரப்பினர் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
Post a Comment