Ads (728x90)

முல்­லைத்­தீ­வில், ‘புதை­யல் இருப்­ப­தாக தக­வல் கிடைத்­துள்­ளது’ என்­று­கூறி புதை­யல்­கள் தோண்­டப்­ப­டு­கின்ற இடங்­க­ளில் ஏற்­க­னவே இர­க­சி­ய­மாக தோண்­டப்­பட்டு புதை­யல்­கள் எடுக்­கப்­பட்டு விடு­கின்­ற­னவா என்று பிர­தேச மக்­கள் சந்­தே­கம் எழுப்­பு­கின்­ற­னர்.

அதற்­கேற்ப புல­னாய்­வா­ளர்­க­ளின் நட­மாட்­ட­மும் அதி­க­ரித்­துள்­ளன என அவர்­கள் கூறு­கின்­றனர்.

முல்­லைத்­தீவு மாவட்­டம் வலை­ஞர் மடத்­தில் விடு­த­லைப்­பு­லி­கள் பெறு­ம­தி­யான பொருள்­கள் மற்­றும் வெடி­பொ­ருள்­கள் என்­ப­வற்றை புதைத்து வைத்­துள்­ள­னர் எனத் தெரி­வித்து சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மற்­றும் பொலி­ஸா­ரு­டன் முல்­லைத்­தீவு மாவட்ட பதில் நீதி­வான் பரஞ்­சோதி தலை­மை­யில் புதை­யல் தோண்­டும் பணி நேற்­று­முன்­தி­னம் மாலை 3 மணி­யி­லி­ருந்து 6.30 வரை இடம்­பெற்­றது.

ஆனால் புதை­யல் எது­வுமே எடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.இது தொடர்­பில் மேலும் அவர்­கள் தெரி­வித்­த­தா­வது:
விடு­த­லைப்­பு­லி­கள் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ தங்­கங்­கள் மற்­றும் வெடி­பொ­ருள்­கள், பணம் என்­ப­வற்றை புதைத்து வைத்­துள்­ள­னர் என்று கூறு­கின்­றார்­கள். ஆனால் இது­வரை எவை­யும் அப்­படி மீட்­கப்­ப­ட­ வில்லை.

அவ்­வாறு இருப்­பி­னும் அவை விடு­த­லைப்­பு­லி­ க­ளின் தங்­கங்­கள் அல்ல.
விடு­த­லைப்­பு­லி­க­ளின் வங்­கி­க­ளில் வைத்த மக்­க­ளின் தங்­கங்­கள்­தான் அவை. இவை தொடர்­பில் ஏற்­க­னவே தக­வல் அறிந்­த­வர்­கள் சிலர் குறிப்­பிட்ட பகு­தி­க­ளில் இர­க­சி­ய­மா­கத் தோண்டி எடுத்­துச் சென்­று­வி­டு­கி­றார்­கள் என்றே நாம் கரு­து­கி­றோம்.

அண்­மை­யில்­கூட வலை­ஞர்­ம­டம் பகு­தி­யில் பல­த­ட­வை­கள் அம்­பு­லன்ஸ் வண்டி வந்­து­சென்­றது. எதற்கு வந்­தது என்று தெரி­ய­வில்லை. கஞ்சா கடத்­தல்­க­ளும் இடம்­பெற்­றுள்­ளன. அத­னால் நாங்­கள் எட்­டிக்­கூ­டப் பார்க்­க­வில்லை.

உண்­மை­யில் ஏற்­க­னவே இர­க­சி­ய­மாக தோண்டி எடுக்­கப்­பட்­டு­விட, சட்­டத்­துக்­காக மட்­டுமே இவ்­வாறு நீதி­வான் முன்­னி­லை­யில் தோண்­டப்­ப­டு­கின்­றமை சட்­டத்தை ஏமாற்­றும் செயல். இது தொடர்­பில் உரிய தரப்­பி­னர் அதி­கூ­டிய கவ­னம் செலுத்த வேண்­டும்  என்­ற­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget