Ads (728x90)

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைக்­குத் தான் கட்­டுப்­பட்டு நடப்­ப­தற்கு நிபந்­தனை விதித்­துள்­ளார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

‘‘தமிழ் அர­சுக் கட்­சிக் கொள்­கை­க­ளுக்கு கட்­சித் தலை­மைத்­து­வம் இன்­ன­மும் விசு­வா­ச­மாக இருப்­பதை பகி­ரங்­க­மாக அறி­வித்­தால், இடைக்­கால அறிக்­கை­யின் போதாமை பற்­றி வெளிப்­ப­டுத்­தி­னால், எவற்றை நாங்­கள் அர­சி­யல் ரீதி­யா­கப் பெற­வேண்­டும் என்­ப­தைப் பகி­ரங்­க­மாக அறி­வித்­தால், அவை கட்­சி­யின் 2013 ஆம் ஆண்­டின் தேர்­தல் அறிக்­கைக்கு ஏற்­பு­டை­ய­தாக இருந்­தால் நான் கட்சி கூறு­வ­தற்­குக் கட்­டுப்­ப­டு­வேன்’’ என்று அவர் தெரி­வித்­தார்.

வடக்கு முத­ல­மைச்­சர் அவ்­வப்­போது ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­டும் தனது கேள்வி பதில் அறிக்­கையை நேற்­றும் விடுத்­தார். அதில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

கேள்வி: நீங்­கள் உங்­கள் கட்­சிக்­குக் கட்­டுப்­பட்டு நடக்­கின்­றீர்­கள் இல்லை என்ற குற்­றச்­சாட்டு இலங்கை தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதே?

பதில்: எனக்­கென்று கட்சி ஒன்­றில்லை. என்­னு­டைய ஒத்த கருத்­து­டை­ய­வர்­கள் தமிழ் மக்­கள் பேரவை என்ற நாமத்­து­டன் ஒரு மக்­கள் இயக்­க­மா­கப் பரி­ண­மித்­துள்­ளார்­கள். நான் எந்­தக் கட்­சி­யை­யும் நாடிச் செல்­ல­வில்லை. எந்­தக் கட்­சி­யும் என்­னைத் தமது கூட்­டங்­க­ளுக்கு அழைத்­த­து­மில்லை.

கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டா­தது தெரி­யாது கட்சி அர­சி­யல் எது­வும் வேண்­டாம் என்­றி­ருந்த என்னை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அங்­கத்­து­வக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்­ட­போது மறுக்க முடி­யா­மல் அர­சி­ய­லில் கால் வைத்­தேன்.

நான் சேர முன் வந்­தது அந்த ஐந்து கட்­சி­கள் சேர்ந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னுள்­ளேயே. அப்­போது அது பதிவு செய்­யப்­ப­டாத ஓர் அர­சி­யல் கூட்­ட­மைப்பு என்­பது கூடத் தெரி­யா­தி­ருந்­தது.

வன்­முறை சாராத கட்சி என்ற வகை­யில் இயற்­கை­யா­கவே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் தான் எனது தொடர்­பு­கள் சார்ந்­தி­ருந்­தன. 2013ஆம் ஆண்­டின் தேர்­தல் அறிக்கை எனக்­குத் தரப்­பட்­டது. அதில் உள்ள கொள்­கை­கள் எனக்­குச் சரி­யெ­னப்­பட்­டன. அதனை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு என் அர­சி­யல் வாழ்க்­கைப் பய­ணத்தை மேற்­கொண்­டேன்.

கொள்­கைக்­கும் யதார்த்­தும் இடை­வெளி அதி­கம்

கொள்­கை­க­ளுக்­கும் விர­வி­யி­ருந்த யதார்த்த நிலைக்­கும் இடை­யில் பெரிய விரி­சல் இருந்­ததை நான் உணர்ந்­தேன். கொள்­கை­கள் மக்­க­ளுக்கு. ஆனால் அர­சி­யல் கொடுக்­கல் வாங்­கல்­கள் கட்­சித் தலை­மைப்­பீ­டங்­க­ளுக்கே என்­ப­து­தான் யதார்த்­த­மாக இருந்­தது.

தேர்­தல் அறிக்­கை­யின் சிந்­த­னைக்­கேற்ப இனப்­ப­டு­கொலை சம்­பந்­த­மான தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்டு எமது வட­மா­காண சபை­யால் 1ஏக மன­தாக ஏற்­கப்­பட்­ட­போது கட்­சித் தலை­மைத்­து­வம் அதிர்ச்சி அடைந்­ததை நான் கண்­டேன்.

அது சம்­பந்­த­மான தலை­மைத்­து­வக் கருத்­துக்­கள் முன்­னுக்­குப் பின் முர­ணாக அமைந்­த­தை­யும் கண்­டு­கொண்­டேன்.

பின்­னர்­தான் அறிந்­து­கொண்­டேன், சில­ருக்கு வர­வி­ருந்த சுய­நல வர­வு­கள் சில அந்­தத் தீர்­மா­னத்­தால் போன­தென்று. நாங்­கள் மக்­க­ளி­டம் வாக்கு கேட்­கும்­போது எமது கொள்­கை­களை முன்­வைத்தே கேட்­கின்­றோம். என்­னைப் பொறுத்த வரை­யில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்­டியோ நாங்­கள் அர­சி­டம் எமது கோரிக்­கை­களை முன் வைப்­பது என்­றால் அது மக்­க­ளின் கருத்­துக்­கி­சை­வாக நடை­பெற வேண்­டும். ஆகக் குறைந்­தது கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­க­ளின் கருத்­தொ­ரு­மிப்­பின் அடிப்­ப­டை­யில் அவ்­வா­றான முரண்­பட்ட கோரிக்­கை­கள் முன்­வைக்­கப்­பட வேண்­டும்.

மக்­கள் சார்­பாக மாற­வேண்­டும்

தலை­மையே கூட்­டுக் கட்­சி­யின் கொள்­கை­களை உதா­சீ­னம் செய்­யும்­போது ஒரு­வர் என்ன செய்­ய­வேண்­டும்? ஒன்று வெளி­யே­ற­வேண்­டும். வெளி­யே­றி­னால் உதா­சீ­னம் செய்து நடந்­து­கொள்­ப­வர்­கள் கை ஓங்­கி­வி­டும். இது எமது மக்­க­ளையே பாதிக்­கும். மக்­கள் பெரு­வா­ரி­யாக என்­னைத் தேர்ந்­தெ­டுத்த போது இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­ன­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­தும் ஒட்டு மொத்த கொள்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில்த்­தான் தேர்ந்­தெ­டுத்­தார்­கள்.

அவற்­றி­லி­ருந்து ஒரு கட்­சி­யின் தலை­மைத்­து­வம் வழுக முற்­ப­டும்­போது கட்­சி­யின் நட­வ­டிக்­கை­களை மக்­கள் சார்­பாக மாற்ற எத்­த­னிப்­பதே எமது கடமை என்று உய்த்­து­ணர்ந்­தேன்.

கட்­சித் தலை­மைத்­து­வம் கட்­சிக் கொள்­கை­களை மாற்­றும் போது உப­யோ­கிக்­கும் கரு­வி­தான் கட்சி ஒழுக்­கம் என்ற பிரம்பு. ‘‘நாங்­கள் சொல்­வதை நீங்­கள் செய்­யுங்­கள். இல்­லை­யேல் அடுத்த முறை உங்­க­ளுக்­குக் கட்­சித் துண்டு கிடைக்­காது’’ என்­பார்­கள் அல்­லது ‘‘நாங்­கள் சொல்­வதை நீங்­கள் மக்­க­ளுக்கு எடுத்­துச் சென்­றீர்­கள் என்­றால் அடுத்­த­முறை உங்­க­ளுக்­குத் துண்டு நிச்­ச­யம்’’ என்­பார்­கள். அவ்­வாறு கூறி உறுப்­பி­னர்­க­ளைச் சதி வேலை­க­ளில் ஈடு­ப­டுத்­தி­ய­மை­யும் உண்டு. தலை­மை­யு­டன் முரண்­பட்­டால் கட்சி ஒழுக்­கத்தை மீறி­ய­மைக்­குக் கார­ணம் கேட்­பார்­கள்.

கட்­சிக் கொள்­கைக்கு தலை­மைத்­து­வம் கட்­டுப்­ப­ட­வில்லை
இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்­குக் கட்­டுப்­பட்டு நான் நடக்­க­வில்லை என்று கூறும்­போது அதே கட்­சி­யின் கொள்­கைக்­குக் கட்­டுப்­ப­டாத, கட்­சித் தலை­மைத்­து­வத்­துக்கு நான் என்ன பதில் கூற­மு­டி­யும்? என்னை கட்­சிக் கூட்­டங்­க­ளுக்கு அழைத்­தி­ருந்­தால் எமது முரண்­பா­டு­கள் பற்­றிக் கூறி­யி­ருப்­பேன். அது நடை­பெ­றாத நிலை­யில் எமது கொள்கை ரீதி­யான விட­யங்­களை வெளிப்­ப­டை­யாக மக்­க­ளுக்­குக் கூறு­வதே எமது கடமை என்று நான் நினைத்­தேன். தவ­றி­ழைக்­கும் கட்­சித் தலை­மைப்­பீ­டம் தங்­க­ளைச் சரி­யான வழிக்கு மாற்­றா­மல் என்­னைக் குறை கூறு­வது விசித்­தி­ர­மாக இருக்­கின்­றது.
தேர்­தல் அறிக்கை என்ன ?
தற்­போ­தைய உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்கு எந்­தத் தேர்­தல் அறிக்­கையை முன் வைத்து இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி வாக்­குக் கேட்­கின்­றது என்­ப­தைப் பகி­ரங்­க­மாக அறி­விக்­க­வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் கட்­சித் தலை­மைத்­து­வத்­தி­டம் சில கேள்­வி­களை மக்­கள் கேட்­க­லாம். எமக்கு ஒன்­றைக்­கூறி அதற்கு மாறாக அர­சு­டன் நீங்­கள் நடந்­து­கொள்­ளும் நட­வ­டிக்­கை­யின் பின்­னணி என்ன?

நெருக்­கு­தல்­கள் கார­ணம் எனின் யாரால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட நெருக்­கு­தல்­கள்? என்று இன்­னோ­ரன்ன கேள்­வி­களை மக்­கள் கேட்க வழி­வ­குக்­க­வேண்­டும்.
தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­திற்கு நான் கூறும் பதில், பல தட­வை­கள் சிறை சென்ற போது நீங்­கள் கொண்­டி­ருந்த உறு­தி­யான கொள்­கை­க­ளில் இருந்து நீங்­கள் வழுவி விட்­டீர்­களா? ஏன்? பிறழ்­வான கொள்­கை­க­ளுக்கு என்­னைப் பணி­யச் செய்­வ­தில் உங்­க­ளுக்­கென்ன இலா­பம்? – என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget