டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2017-ம் ஆண்டு 51சதவீதம் உயர்ந்துள்ளது.சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் இந்தியா இயக்குனர் தரன்ஜித் சிங் டுவிட்டரில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் பற்றி விவரத்தை வெளியிட்டார்
அதில் அவர் கூறியது,2017ம் ஆண்டில் டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 37.5 மில்லியனாக உள்ளது.. இந்தாண்டில் இது 51 சதவீதம் ஆகும். இதன் மூலம் அவர் முதலிடத்தில் உள்ளார். இதற்கு காரணம் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியது, செல்லாத நோட்டு ஒழிப்பு முதலாமாண்டு விழா, மான்கிபாத் , ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் மோடியின் நடவடிக்கைகள் தான். என்றார். தொடர்ந்து சச்சின், விராத் கோஹ்லி, பிரியங்கா சோப்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
Post a Comment