Ads (728x90)


வடக்­கு-­­ –கி­ழக்­கில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் நில­வு­ கின்ற வெற்­றி­டங்­க­ளுக்­கும் வீதி அபி விருத்தி அதி­கார சபை­யில் நில­வும் வெற்­றி­டங்­க­ளுக்­கும் வடக்கு -– கிழக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் இருந்து கிடைக்­கும் பெயர்­ப்பட்­டி­ய­லின் ஊடாக ஆள்­சேர்ப்புச் செய்­யப்­ப­டும்.
இவ்­வாறு சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக்­ ஷ்மன் கிரி­ யெல்ல சபை­யில் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் சனிக்­கி­ழமை அமைச்சு அறி­விப்பு நேரத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வரவு -– செல­வுத் திட்ட விவா­தங்­க­ளின்­போது அரச நிறு­வ­னங் க­ளுக்கு வெற்­றி­டங்­களை நிரப்­பும் போது வடக்கு -– கிழக்­கில் உள்­ள­வர்­க­ளுக்கு அநீதி இழைக் கப்­ப­டு­வ­தா­க­வும் வடக்கு – கிழக்­குக்கு வெளியே உள்­ள­வர்­களை வெற்­றி­டங்­க­ளுக்கு நிரப்­பு­வ­தா­க­வும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சபை­யின் அவ­தா­னத்­திற்­குக் கொண்டு வந்­த­னர்.

இந்த விட­யம் தொடர்­பாக நான் ஆராய்ந்­தேன். எதிர்­வ­ரும் காலங்­க­ளில் உயர்­கல்வி மற்­றும் நெடுஞ்­சாலை அமைச்­சின் கீழ் உள்ள பல்­க­லை­க­ழ­கங்­க­ளில் நிறை­வேற்று அல்­லாத கல்வி சாரா பீடங்­க­ளுக்­கும் வீதி அதி­கார சபைக்­கும் ஆள்­சேர்ப்பு செய்­யும்­போது வடக்கு கிழக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வழங்­கும் பெயர்ப் பட்­டி­யல்­படி நிய­ம­னங்­கள் வழங்­கப்­ப­டும்.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லை­க­ழ­கம் மற்­றும் அத­னு­டன் இணைந்த கிளி­நொச்சி வளா­கம் மற்­றும் வவு­னியா வளா­கத்­துக்­கும், கிழக்கு பல்­க­லைக் கழ­கம் மற்­றும் அத­னு­டன் இணைந்த திரு­கோ­ண­மலை வளா­கம், சுவாமி விபு­லா­னந்­தர் அழ­கி­யற் கற்கை நிறு­வ­னம், தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கம் போன்ற நிறு­வ­னங்­க­ளில் நில­வு­கின்ற வெற்­றி­டங்­க­ளுக்­கும் வீதி அதி­கார சபை­யில் நில­வும் வெற்­றி­டங்­க­ளுக்­கும் இந்த வகை­யில் ஆள்­சேர்ப்பு செய்­யப்­ப­டும். அப்­போது வடக்­கு-­­கி­ழக்­கில் உள்­ள­வர்­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டாது – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget