Ads (728x90)

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக மக்­கள் வாக்­கெ­டுப்­பு நடத்­து­வ­தற்கு முன்­னர் வடக்­கி­லி­ருந்த முஸ்­லிம் மற்­றும் சிங்­கள மக்­கள் அந்­தந்­தப் பகு­தி­க­ளில் மீண்­டும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் ரியல் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர.

பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் வெளிச்­சம் அமைப்­பி­ன­ரால் கொழும்பு தேசிய நூலகச் சாலை­யின் கேட்­போர் கூடத்­தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இத­னைக் கூறி­னார்.

‘‘அரச வரவு– செல­வுத் திட்­ட­மொன்­றுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் உல­கின் ஒரே­யொரு எதிர்க்­கட்சி தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பா­கத்­தான் இருக்­கும். அவர்­கள் பிரிந்து சென்று தனி­நா­டொன்றை நிறுவ முயற்­சிப்­ப­தற்கு அரசு துணை நிற்­பதை அனு­ம­திக்க முடி­யாது. தற்­போ­தைய அரசு நாட்­டை­யும், நாட்டு மக்­க­ளை­யும் காட்­டிக் கொடுக்­கின்­றது.மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் அமை­தி­யா­கக் காணப்­பட்ட வட மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தற்­போ­தைய அரசு ஆட்­சிப் பொறுப்­பைக் கைப்­பற்­றி­ய­தன் பின்­னர், நிறைய விட­யங்­களை செய்­து­கொள்­கி­றார்’’- என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget