மத்தியவங்கியின் பினைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி இடம்பெறவுள்ளது.பாராளுமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரின் பங்கேற்புடன் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை பாராளுமன்றில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி அறிக்கை தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 6ம் திகதி காலை 10.30 மணியளவில் இடம்பெறும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் தெரிவித்தார்
Post a Comment