Ads (728x90)

தேர்­தல் வன்­மு­றை­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் வேட்­பா­ளரோ, வாக்­கா­ளரோ கைது செய்­யப்­பட்­டால் தேர்­தல் முடி­வ­டை­யும் வரை அவர்­க­ளுக்கு யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றால் பிணை வழங்­கப்­பட மாட்­டாது என்று யாழ்ப்பாண மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தெரி­வித்­தார்.

54 கிலோ கஞ்சா போதைப் பொருளை உடைமை­யில் வைத்­தி­ருந்த குற்­ற­ச்சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வ­ருக்­குப் பிணை கோரித் தாக்­கல் செய்­யப்­பட்ட மனு மீதான விசா­ரணை மேல்­நீ­தி­மன்­றில் நேற்று நடை­பெற்­றது. அதன்­போதே நீதி­பதி இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்ததா­வது:-

தேர்­தல் ஆணை­ய­கம் நீதி­யான, ஜன­நா­யக தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கும் வகை­யில் நீதி­மன்­றங்­கள் செயற்­பட வேண்­டும். யாழ்ப்­பாண மேல் நீதி­மன்ற நியா­யா­திக்கு எல்­லைக்கு உட்­பட்ட பிர­தே­சங்­க­ளில் நடை­பெ­றும் பார­தூ­ர­மான குற்­றங்­க­ளுக்­குத் தேர்­தல் முடி­வ­டை­யும் காலம் வரை­யில் பிணை வழங்­கப்­ப­ட­மாட்­டாது.

யாழ்ப்­பா­ணத்­தில் இது­வரை பார­தூ­ர­மான தேர்­தல் வன்­மு­றை­கள் எது­வும் பதி­வா­க­வில்லை. ஒரு சில வாள் வெட்­டுச் சம்­ப­வங்­கள், கொலை மற்­றும் கொள்ளை சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

அவற்­று­டன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­க­ளைப் பொலி­ஸார் தேடி வரு­கின்­றார்­கள். கொலை , கொள்ளை வாள்­வெட்டு சம்­ப­வங்­கள் போன்ற சமூக விரோத செயல்­க­ளுக்­குத் தேர்­தல் காலத்­தில் பிணை வழங்­கி­னால் தேர்­தல் கால வன்­மு­றை­களை அதி­க­ரித்து விட­லாம்.

பார­தூ­ர­மான குற்­றங்­க­ளுக்கு தேர்­தல் முடி­வ­டை­யும் வரை­யில் பிணை வழங்க முடி­யாது. அவை தொடர்­பான அனைத்து வழக்­கு­க­ளும், தேர்­தல் முடி­வ­டைந்த பின்­னர் எதிர்­வ­ரும் 10ஆம் திக­திக்கு பின்­னரே விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும் என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget