Ads (728x90)

மகிந்த காலத்­தில் இடம்­பெற்ற பெரிய ஊழல், மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­க­ளைத் தீமூட்­டிக் கொளுத்தி தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­கா­கவே மீண்­டும் ஆட்­சி­பீ­ட­மே­று­வ­தற்கு மகிந்த அணி துடிக்­கின்­றது.
இவ்­வாறு தெரி­வித்­தார் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

வெள்­ள­வா­ய­வில் நேற்று நடத்­தப்­பட்ட சுதந்­தி­ரக் கட்­சி­யின் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­தா­வது,

ஜி.எல்.பீரிஸ் ஒரு பேரா­சி­ரி­யர். சட்­டம் படித்­த­வர் என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­கின்­றேன். ஆனால், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தொடர்­பில் அவ­ருக்கு ‘அ’ கூட தெரி­யாது.அவ்­வா­றா­ன­வர்­கள்­தான் இன்று பண்­டா­ர­நா­யக்­க­வின் கொள்கை பற்றி பேசு­கின்­ற­னர்.

ஆட்­சி­யில் இருக்­கும்­போது அடித்த கொள்­ளை­களே அள­வற்­ற­தாக இருக்­கும் நிலை­யில், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் நிறத்­தை­யும் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி (மகிந்த அணி) கொள்­ளை­ய­டித்­துள்­ளது. இப்­ப­டி­யான கொள்­ளை­யர்­கள்ளே இன்று பண்­டா­ர­நா­யக்­க­வின் பய­ணம் குறித்து பேசு­கின்­ற­னர் என்­பதை மக்­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும்.

ஊழல், மோச­டி­களை ஒழித்து நல்­ல­தொரு நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே எனது பிர­தான நோக்­கம். அந்த இலக்கை அடைந்தே தீரு­வேன். அதற்கு மக்­க­ளும் ஆத­ரவு வழங்­க­வேண்­டும். பெரிய ஊழல், மோச­டி­கள் தொடர்­பான 34 விசா­ரணை அறிக்­கை­க­ளும் வெளி­வந்­துள்­ளன.

பெருந்­த­லை­க­ளும் மோச­டி­யு­டன் தொடர்­பு­பட்­டுள்­ளன. தகுதி தரா­த­ரம் பாராது குற்­ற­வா­ளி­கள் அனை­வ­ரும் சட்­டத்­தின்­முன் நிறுத்­தப்­ப­டு­வார்­கள் என்­பதை உறு­தி­யாக கூறி­வைக்க விரும்­பு­கின்­றேன்.

பிணை­முறி மோசடி தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யை­யும் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வேன். மீண்­டும் ஆட்­சிக்கு வரு­வ­தற்­காக ஒரு குழு முயற்­சிக்­கின்­றது. ஆட்­சி­யி­லி­ருந்­த­போது செய்த மோச­டி­களை மூடி­ம­றைப்­ப­தற்­கா­க­வும், விசா­ரணை அறிக்­கை­க­ளைக் கொளுத்­தி­விட்டு, தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பு­வ­தற்­கா­க­வுமே அந்­தக் குழு துடிக்­கின்­றது. அதை மக்­கள் புரிந்து கொள்­ள­வேண்­டும்.

மகா­நா­யக்க தேரர்­க­ளின் சொற்­ப­டியே செயற்­ப­டு­வேன். அவர்­கள் சொல்­வதை நிச்­ச­யம் செய்­வேன். ஏனைய மதத் தலை­வர்­க­ளின் கருத்­து­க­ளுக்­கும் செவி­ம­டுப்­பேன். நாட்­டில் மீண்­டு­மொரு போர் ஏற்­ப­டாத வகை­யில் நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும்  என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget