Ads (728x90)

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொட­ரில் மார்ச் மாதம் 21ஆம் திகதி இலங்கை தொடர்­பான விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது. அதில் பன்­னாட்டு மனித உரிமை அமைப்­புக்­க­ளால் கடும் அழுத்­தம் இலங்கை மீது பிர­யோ­கிக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை வெளி­யி­ட­வுள்­ளார். அதில் அவ­ரும் தனது அதி­ருப்­தியை வெளி­யி­டு­வார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பன்­னாட்டு மனித உரிமை கண்­கா­ணிப்­ப­கம், ஐரோப்­பிய ஒன்­றி­யம் என்­பன கடு­மை­யான விமர்­ச­னத்தை தற்­போதே முன்­வைத்­துள்ள நிலை­யில், பன்­னாட்டு அமைப்­புக்­கள் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக் கூட்­டத் தொடரில் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு 3 ஆண்­டு­கள் கடந்­துள்ள போதும் பொறுப்­புக்­கூ­றல் பொறி­முறை விட­யத்­தில் இது­வரை சரி­யான முன்­னேற்­றம் காணப்­ப­ட­வில்லை என்று பன்­னாட்டு அமைப்­புக்­கள் 37 ஆவது கூட்­டத் தொட­ரில் சுட்­டிக்­காட்ட வுள்ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஹூசை­னின் இலங்கை தொடர்­பான அறிக்­கை­யைத் தொடர்ந்து அர­சின் சார்­பில் அறிக்கை முன்­வைக்­கப்­பட்­ட­வுள்­ளது. அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் இலங்­கை­யின் சார்­பில் அறிக்­கையை முன்­வைப்­பார் என்­ப­து­டன் இலங்­கை­யா­னது ஜெனிவா பிரே­ர­ணை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்­ளார்.

இலங்கை பிரே­ர­ணை­யின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளது என்று கூற­வுள்ள அரசு பிரே­ர­ணையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் காணப்­ப­டு­கின்ற சவால்­கள் குறித்­தும் விளக்­க­ம­ளிக்­க­வுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget