Ads (728x90)

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மித­வா­தக் கட்­சி­யாக தெற்­கில் செயற்­பட்­டா­லும், இன­வா­தக் கட்­சி­யா­கவே வடக்­கில் செயற்­ப­டு­கின்­றது. அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுக் கொள்ள வேண்­டு­மா­யின் ஜனாதிபதி மைத்­தி­ரி­பா­ல­வின் அணி­யி­லேயே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இருக்­க ­வேண்­டும்.

இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்ததா­வது:-

தெற்­கில் மித­வா­தக் கட்­சி­யாக அடை­யா­ளம் காட்­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்­கில் இன­வாத ரீதி­யில் தேர்­தல் பரப்­பு­ரைப் பணி­யில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­யது.

தெற்­கில் தூய்­மை­யான ஹெல உறு­மய கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்ன செய்­கின்­ற­னரோ அதையே வடக்கில் கூட்­ட­மைப்பு செய்து கொண்­டி­ருக்­கின்­றது.

கூட்­ட­மைப்பு ஒரு விட­யத்தை மன­தில் வைத்­துக்­கொள்­ள­வேண்­டும். பெப்­ர­வரி 10ஆம் திக­தி­யு­டன் தேர்­தல் முடிந்­து­வி­டும். அதன் பின்­னரே சரி­யான அர­சி­யல் போக்கு ஆரம்­ப­மா­கும்.

அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­க­ளும் நடக்­கின்­றன. அர­சி­யல் தீர்­வுத்­திட்­டத்தை நிறை­வேற்ற மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை பலம் அவ­சி­ய­மா­கும்.

அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மா­யின் கூட்­ட­மைப்பு மைத்­தி­ரி­யின் அணி­யி­லேயே இருக்­க­வேண்­டும்.

இதனை எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் உணர்ந்து கொள்­வார் என்று நம்­பு­கின்­றோம்  என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget