Ads (728x90)

தென்­னி­லங்­கை­யில் இலங்கை அரசை எவ்­வாறு கவிழ்க்­க­லாம் என்று சதி இடம்­பெ­றுகின்­றதோ அதே­போல வடக்கு, கிழக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பைச் சித­ற­டிக்க முழு வீச்­சில் சதி இடம்­பெற்று வரு­கின்­றது.

இவ்­வாறு தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை­சே­னா­தி­ராசா தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பாண மாந­கர சபைக்­கான தேர்­தல் அறிக்கை வெளி­யீட்டு நிகழ்வு நல்­லூர் இளம் கலை­ஞர் மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இதனை தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,- தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மீது திட்­ட­மிட்ட வகை­யில் பொய்­யான பரப்­பு­ரை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அதி­லும் தமி­ழ­ர­சுக் கட்­சியை இல்­லாது ஒழிக்­கும் முயற்­சி­யில் சிலர் கள­மி­றங்­கி­யுள்­ள­னர்.

நாங்­கள் கொலை­யா­ளி­கள் அல்­லர். கொள்­ளை­யர்­க­ளும் அல்­லர். அண்­மை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 2 கோடி இலஞ்­சம் வாங்­கி­னார் என்று தெரி­வித்­தார் என்று ஊட­கங்­கள் வாயி­லாக அறிந்­தி­ருந்­தேன்.

நான் சாக­டிக்­கப்­ப­டும் காலத்­தில் கூட கண்­ணீர் விட்­ட­தில்லை. சாத­ரா­ண­மாக பல விட­யங்­க­ளுக்கு கண்­ணீர் விட்­டுள்­ளோம். நேற்று ஊட­கம் ஒன்­றில் செய்தி ஒன்றை பார்த்­தேன். முழுக்க முழுக்க தேர்­தல் பரப்­பு­ரைக்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் பொய்யை கூறி­யுள்­ளார். அது மக்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக கொடுக்­கப்­பட்ட திட்­டங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதி ஆகும். இது அரச வழமை ஆகும்.

என்­றும் இல்­லா­த­வாறு வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அதிக நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. திட்­டங்­க­ளும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. முன்­னாள் போரா­ளி­க­ளுக்­காக விசேட வேலைத் திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இந்த முறை­யும் எமது மக்­க­ளுக்­காக 50 ஆயி­ரம் வீட்­டுத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப் பட­வுள்­ளது.

இவ்­வாறு பல சாத­க­மான விட­யங்­கள் இருந்­த­மை­யா­லேயே நாம் வரவு செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு கொடுத்­தோம். இந்த நிலை­யில் மிகப் பெரிய பொய்யை ஊட­கம் வெளி­யிட்­டுள்­ளது. அதைப் பார்த்து நான் கண்­ணீர் விட்­டேன். இந்த விட­யத்தை சும்மா விடப் போவ­தில்லை. இதற்கு நாம் முழு­மை­யாக விளக்­கத்தை ஆதா­ரத்­து­டன் வழங்­க­வுள்­ளேன்.

அந்த உறுப்­பி­னர் கூறு­வது போல நாம் வெறு­மனே 2 கோடி ரூபா­வுக்­குத்­தான் விலை போக வேண்­டுமா?. விலை போவ­தாக இருந்­தால் எத்­த­னையோ மில்­லி­யன் ரூபாயை கேட்­டி­ருப்­போம். நாம் அவ்­வா­றான மன­நி­லை­யு­டன் எந்­தக் காலத்­தி­லும் இருந்­த­தில்லை. இங்­குள்ள பல சிறு கட்­சி­கள் எல்­லாம் அமைச்­சுப் பத­வியை தக்க வைத்­துள்­ளன. முன்­னைய காலத்­தி­லும் அமைச்­சுப் பத­வி­களை பெற்­றுள்­ள­னர். நாம் அமைச்­சுப் பத­வி­கள் கூட வேண்­டாம் என்று கூறி மக்­க­ளுக்­கா­கப் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம்.

தற்­போ­தைய அர­சி­லும் கூட எம்மை அமைச்­சுப் பத­வியை ஏற்க வேண்­டும் என்று கோரி­யி­ருந்­தார்­கள். நாம் அதனை நிரா­க­ரித்து தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­காக போராடி வரு­கின்­றோம். எம்­மீது திட்­ட­மிட்டு சில பொய்­யான பரப்­பு­ரை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அண்­மை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூறி­ய­தாக வெளி­வந்த செய்தி தொடர்­பாக நாம் தேர்­தல் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ளோம். சட்­டத்­த­ர­ணி­க­ளு­டன் ஆலோ­சனை செய்து வரு­கின்­றோம். இந்த விட­யத்தை நாம் சும்மா விட­மாட்­டோம்.என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget