Ads (728x90)

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும்இ அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் நிலவுகின்ற அரசியல் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் வெளியில் வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சுஜுவ சேனசிங்ஹ, அரசாங்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்வது குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget