Ads (728x90)

எதிர்வரும் பத்தாண்டு காலப் பகுதியில் கொழும்பு மா நகரில் குடிசைகள் அற்ற அபிவிருத்தி நகரமாக தரமுயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரளை பிரதேசத்தில் எலைற் ரெஸிடென்ஸிஸ் மாடிக்கட்டட வீடமைப்புத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவத்தில் பிரதமர் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.

அரசாங்கம் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவருக்காக நிர்மாணிக்கப்படும் இந்த வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகளைக் கொள்வனவு செய்வதற்காக விசேட கடன் வசதியும் வழங்கப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget