Ads (728x90)

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலையினால் இதுவரையில் 237,940 குடும்­பங்­களை சேர்ந்த 803,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐவர் பேர் பலி­யா­கி­யுள்­ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இவை தவிர மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம்  கார­ண­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 1,046 வீடுகள் பகு­தி­ய­ளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்­க­ளுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால், மண் சரிவு அபாயம், இடி, மின்னல் தாக்கம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் நிலையம் மக்களைக் கேட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget