அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பிரெட் கவனாக்கை அதிபர் டொனால் டிரம்ப் நியமித்த நிலையில் அவர் மீது பாலியல் துன்புறுத்தலுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த நிலையில் நேற்று செனட் சபையில் நீதிபதி நியமன ஒப்புதலுக்கான வாக்கெடுப்பு நடக்க இருந்தது. அதற்கு சில மணிநேரத்திற்கு முன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி வாஷிங்டன் நகரில் பேரணியாக சென்றனர். அவர்கள் கவனாக்கிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Post a Comment