தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இவை கலந்துரையாடப்படுமா என்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசேட பிரேரணை ஒன்றினை பாராளுமன்றத்தில் முன்வைத்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சர்கள் தொடர்பான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அவசரமாக சந்திக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தபோது 17 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு தொடர்பான கூட்டம் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக கலந்துரையாடலாம் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அன்றைய தினமே இதற்கு ஒரு தீர்மானம் எடுக்கப்படுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment