Ads (728x90)

சீரகம் மருத்துவ குணம் நிறைந்தது. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து பருகி வந்தால்  எவ்வித அஜீரணக் கோளாறுகளும் வராது.

சீரகத்தை லேசாக வறுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு  சேர்த்து மென்று தின்று, ஒரு கப் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் சுகமாகும்.

சிறிது சீரகத்துடன் மூன்று பற்கள் உள்ளியை சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாற்றில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து  சாப்பிட்டால் அதிக பேதி போக்கு குணமாகும்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு கப் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

உடலுக்கு குளிர்ச்சியாகவும், உடலைப் பளபளப்பாகவும் வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளவும்.

சீரகத்தைப் பொடி செய்து திராட்சைப் பழச்சாற்றுடன் கலந்து பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த  அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget