Ads (728x90)


கிளி­நொச்சி மாவட்­டத்­தில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இடர் கார­ண­மா­கச் சுகா­தார நெருக்­கடி ஏற்­பட்­டால் அதனை எதிர்­கொள்­ளச் சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் தயார் நிலை­யில் இருக்க வேண்­டும் என்று மாவட்­டச் செய­லர் சு.அரு­மை­நா­ய­கம் பிராந்திய சுகா­தா­ரத் திணைக்­க­ளப் பணிப்­பா­ள­ருக்கு அறி­வித்­துள்­ளார். 


 கிளி­நொச்சி மாவட்­டத்­தில் சகல குளங்­க­ளும் வான்­பாய்­கின்­றன. இர­ணை­ம­டுக் குளத்து நீரும் அதிக­ள­வில் வெளி­யே­று­கின்­றது. மக்­கள் செறிந்து வாழும் பகு­தி­க­ளில் வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. குடி­தண்­ணீர்க் கிண­று­கள் பல­வற்­றுக்­குள் வெள்­ளம் சென்­றுள்­ள­தால் அத்­த­கைய கிண­று­க­ளி­லி­ருந்து தண்­ணீ­ரைப் பெற­மு­டி­யாத இக்­கட்டான நிலை ஏற்­பட்­டுள்­ளது.

 வெள்­ளம் தேங்­கி­யுள்ள பகு­தி­க­ளில் குளிர் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கி­றது. இத­னா­லும் மக்­க­ளுக்­குக் குறிப்­பா­கச் சிறார்­க­ளுக்கு ஆரோக்­கி­யக் குறை­பாடு ஏற்­ப­ட­லாம்.

 பற்­றை­கள், நிலங்­கள் , காடு­கள் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் வெள்­ளம் தேங்­கி­யுள்­ள­தால் விச ஜந்­துக்­க­ளான பாம்பு, தேள் உள்­ளிட்­டவை வெள்­ளத்­து­டன் வர­வாய்ப்­புள்­ளன. நுளம்பு பெரு­க­வும் வாய்ப்­புள்­ளது. அவற்­றால் சக­ல­ருக்­கும் பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

பாதை­கள் பல தடைப்­பட்­டுள்­ளன. அவ­சரப் பொருள் கொள்­வ­னவு, மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்­லும் பாதை­க­ளி­லும் தடை­கள் ஏற்­பட்­டுள்­ளன. பாதிப்பு ஏற்­ப­டு­மா­னால் சிக்­கல் வர­லாம் என்று கரு­தப்­ப­டு­வ­தால் மேற்­கண்ட அறி­வு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­கள், மருத்­து­வர்­கள், இவற்­றைக் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும் என்­றும் மாவட்­டச் செய­லாளர் கூறி­யுள்­ளார்.

மாவட்­டச் செய­ல­ரின் அறி­வு­றுத்­தல் கிடைத்­தது. மருத்­துவ சேவை­கள் தடை­யின்றி இடம்­பெ­று­வ­தற்­கான சகல கண்­கா­ணிப்­புக்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன. இது­வரை எங்­கும் அதி­க­மான நோயா­ளர் என்ற நிலமை உரு­வா­க­வில்லை என்று கிளி­நொச்­சிப் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­து­வர் சி. குமா­ர­வேல் தெரி­வித்­தார்.

தர்­ம­பு­ரம் பிர­தேச மருத்­து­வ­ம­னைக்­குள் நேற்­று ­முன்­தி­னம் வெள்­ளம் புகுந்­த­தால் மருத்­துவ சேவை­கள் பாதிக்­கப்­பட்­டன. நோயா­ளர்­கள் சக­ல­ரும் கிளி­நொச்சி மாவட்ட மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர். இன்­றும் வெள்­ளம் வழிந்தோடவில்லை.

அக்­க­ரா­யன் பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு முறி­கண்டி ஊடா­கச் செல்­லும் பாதை முற்­றா­கத் தடைப்­பட்­டுள்­ளது. எனி­னும் கோணா­வில் ஊடான போக்­கு­வ­ரத்­துப் பாதிக்­க­வில்லை. சுகா­தா­ரப் பணி­கள் வழ­மை­போன்று இடம்­பெ­று­கின்­றன என்­றும் மருத்­து­வர் மேலும் தெரி­வித்­தார். கிளி­நொச்சி மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக சிகிச்சை தேவைப்­ப­டின் யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­ப­டு­வர்  என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget