Ads (728x90)

வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர்­கள் பல­ருக்கு நீண்ட கால­மாக நிலு­வைக் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. கல்­வித் திணைக்­க­ளம் உரிய கவ­னம் இன்­றிச் செயற்­ப­டு­கி­றது என்று ஆசி­ரி­யர்­கள் வேதனை தெரி­விக்­கின்ற­னர்.

வடக்கு மாகா­ணத்­தில் பணி­யாற்­றும் நூற்றுக் கணக்­கான ஆசி­ரி­யர்­க­ளுக்­கான நிலு­வைக் கொடுப்­ப­ன­வு­கள் 5 ஆண்­டு­கள் கடந்­தும் வழங்­கப்­ப­டாது இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றது. பல­முறை நேரில் சென்று கோரிய போதி­லும் ஒரு சில­ருக்கு மட்­டுமே நிலு­வைக் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­பட்­டன. இருப்­பி­னும் பல­ருக்கு வழங்­கப்­ப­டவே இல்லை.

இவ்­வாறு வழங்­கப்­பட்ட சில­ருக்­கான கொடுப்­ப­னவு இறு­தி­யாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அள­வில் வழங்­கப்­பட்­டது. இதற்­குப் பின்­னர் எவ­ருக்­கும் வழங்­கப்­ப­ட­வில்லை.

வலய மற்­றும் மாகாண திணைக்­க­ள ங்­க­ளில் பணி­யாற்­றும் அலு­வ­லர்­க­ளின் அசி­ரத்­தையே இந்­தத் தாம­தங்­க­ளுக்­குக் கார­ண­மாக இருப்­பது கண்­கூ­டா­கத் தெரி­கின்­றது. எத்­தனை தட­வை­கள் அலு­வ­ல­கங்­க­ளுக்கு அலைந்­தா­லும் அது தொடர்­பில் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­ற­வில்லை என்று ஆசி­ரி­யர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

இவ்­வாறு ஆசி­ரி­யர்­கள் தெரி­விக்­கும் குற்­றச் சாட்­டுக்­கள் தொடர்­பில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லாளர் எஸ்.சத்­தி­ய­சீ­ல­ன் தெரிவித்ததாவது,

”வலய ரீதி­யில் நிலு­வை­க­ளைக் கணக்­கிட்டு மாகா­ணத்­தின் ஊடாக திறை­சே­ரி­யி­டம் விண்­ணப்­பித்தே நிலு­வை­யைப் பெற்று விநி­யோ­கம் செய்­வது வழமை. இந்த அடிப்­ப­டை­யில் வடக்கு மாகாண ஆசி­ரி­யர்­க­ளின் நிலு­வைக் கொடுப்­ப­ன­வு­களை வழங்­கு­வ­தற்­காக மட்­டும் 539 மில்­லி­யன் ரூபா வேண்­டும். அதில் இந்த ஆண்டு கணக்­கிட்ட 153 மில்­லி­யன் ரூபாவை வழங்­கு­மாறு திறை­சே­ரி­யி­டம் கோரிக்கை விடுத்­தோம். இருப்­பி­னும் அவை கிடைக்­க­வில்லை. தொடர்ந்து முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன” என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget